பரிசளிப்பு விழா

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்குப் பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் காந்திகிராம் பல்கலைக் கழகம் மேனாள் துணை வேந்தர் ந.மார்க்கண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்துஸ்தான் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சரஸ்வதி கண்ணையன், கல்லூரி முதல்வர் கு.மா.சின்னதுரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ப.பா.ரமணி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.