கொரோனாவை தடுப்பது மக்களின் கையில் தான் உள்ளது

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார்.

இதில், கொரோனாவைத் தடுப்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற விதிமுறைகளைக் கடைபிடித்தால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும்.

கொரோனாவைத் தடுக்க பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்புத் தர வேண்டும்.

மே மாதத்தைபெ போல ஜூன் மாதத்திலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும்.

கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம், இந்தியாவில் தற்போது உயர்ந்துள்ள கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது.

என்று தெரிவித்துள்ளார்.