3,115 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தின், இடிகரை பேரூராட்சிக்குட்பட்ட கோவிந்தநாயக்கன்பாளையம், இடிகரை, செங்காளிபாளையம், சென்னமநாயக்கன்பாளையம், மணியகாரன்பாளையம் ஆகிய பகுதிகளில் வாழ்வாதாரம் பாதித்த 3,115 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 6 வகையான காய்கறித் தொகுப்பை சரவணம்பட்டி பகுதி கழகப் பொறுப்பாளர் பையாக்கவுண்டர் வழங்கினார்.

ஒன்றிய கழகச் செயலாளர் சுரேஷ்குமார், பேரூர் கழகச் செயலாளர் ஜனார்த்தனன், அவைத்தலைவர் துரைசாமி, மகாலிங்கம், அரசூர் பூபதி, காளப்பட்டி பொன்னுசாமி, சுதாசேகர், ஜெயப்பிரகாஷ், கதிரவன், ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ், கார்த்தி, விஜயகுமார், சரவணன், அத்திப்பாளையம் ஊராட்சி செயலாளர் சின்னச்சாமி, வைரமுத்து, விஜயகுமார், சக்திவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.