11 ஆம் தேதி முதல் டீ கடைகள் திறக்க அனுமதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் காலை ஆறு மணி முதல் மாலை 7 மணிவரை டீ கடைகள் செயல்படலாம் என்றும் அமர்ந்தோ நின்றோ குடிக்க ஓடாது, பார்சல் மட்டுமே வாங்கிச் செல்லலாம் என்று செய்தி குறிப்பு வெளிட்டுள்ளார்.
இதனை மீறினால் உடனடியாக கடைகள் முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணிநேரமும் செயல்பட முன்பே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவைகள் வரும் 11 ஆம் தேதி முதல் இந்த நடைமுறைகள் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.