பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 500 ஏழை குடும்பங்களுக்கு மோடி கிட்

கொரோனா பாதிப்பில் ஏழை எளிய மக்கள் தமிழகம் முழுவதும் பாதிப்படைந்து உள்ளனர். இதையொட்டி பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படியும், தேசியத் தலைவர் நட்டா அவர்களின் ஆலோசனையின்படியும், தமிழகத் தலைவர் முருகன் அறிவுறுத்தலின்படியும்,

பாரதிய ஜனதா கட்சி கோவை மாநகர் மாவட்டம் செல்வபுரம் மண்டலம் சார்பாக நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோட்ட பொறுப்பாளர் ஜி.கே.செல்வகுமார் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மோடி கிட் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், தாமு ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் மண்டலத் தலைவர் குமார், மண்டல பொதுச் செயலாளர்கள் தீனா மற்றும் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் செல்வபுரம், தெலுங்குபாளையம் பகுதில் உள்ள மக்கள் அரசின் அறிவுரைக்கு ஏற்ப சமூக இடைவெளியை கடைப்பிடித்து நின்று நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.