கள ஆய்வுக்குழுவினருடன் ஆய்வு கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக கள ஆய்வுக்குழு அலுவலர்கள் இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் கஜலெட்சுமி ஆகியோர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமா ஜடாவத் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி அவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில்,கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. 10 மண்டலங்களிலுள்ள 30 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசோதனை முகாம்கள் நடைபெறுவதையும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனைவரும் சமூக விலகல், முகக்கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி எந்திரங்கள் கொண்டு தொடர்ச்சியாக பொதுஇடங்களில் மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டது என கள ஆய்வுக்குழு அலுவலர்கள் இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் கஜலெட்சுமி தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் (கலால்) கலைவாணி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ்பாபு, துணை காவல் கண்காணிப்பாளர் பிரேமானந்தன், துணை இயக்குநர் (சுகாதாரம்) அருணா, மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமார் ரத்தினம், ரவி, மகேஷ்கனகராஜ்,செந்தில்அரசன்,செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.