முககவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அனைவரும் முககவசங்களை தவறாமல் அணிந்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் முககவசங்களை கழற்றக் கூடாது.

மேலும், முககவசங்கள் அணியாதவர்கள் மற்றும் முககவசங்களை கழற்றி விட்டுச் செல்பவர்கள் மீது 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே இதை தவறாமல் அனைவரும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனை மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.