இந்தியா ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய இந்துஸ்தான் கல்லூரியின் என்சிசி மாணவர்கள்

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில், இந்தியா ராணுவத்தை சேர்ந்த 3 வீரர்கள், நம் தாய்நாட்டை காக்க வீர மரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவர்கள் அவர்களுடைய ஊரில், அவர்களுடைய வீட்டிலேயே இருந்தபடி (4.5.2020) திங்கட்கிழமை, மாலை 7.00மணிக்கு இறந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்களை வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்களை தூவி, அஞ்சலி செலுத்தனர்கள் மற்றும் நாட்டிற்காக உயிரிழந்த இந்தியா ராணுவ அதிகாரிகளும் காவல் துறையினருக்கும் இந்துஸ்தான் கல்வி நிறுவங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, முதலவர் பொன்னுசாமி மற்றும் அனைத்துறை பேராசிரியர்களும், மாணவர்களும் அவர்களுடைய அஞ்சலியை செலுத்தினர். இத்தகவலை கல்லூரி என்சிசி பொறுப்பாளர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.