அம்மா உணவகத்தின் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் ராமர் கோயில் கல்யாண மண்டபத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக, அம்மா உணவகத்தின் பணியாளர்களுக்காக கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பாரிசோதனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் அம்மா உணவகத்தின் பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிற கர்ப்பிணிப்பெண்கள் ஆகிய 250-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில், மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், உதவி நகர் நல அலுவலர் வசந்தகுமார், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.