இன்றும் கார்ல் மார்க்ஸ்

‘விதை விதைத்தவன் உறங்கலாம், விதைகள் என்றும் உறங்காது’ என்ற கார்ல் மார்க்ஸின் தத்துவத்திற்கு இவரே உதாரணம். முதலாளி எனும் முதலைகள் தொழிலாளிகளின் உழைப்பை விழிங்கி கொண்டிருந்த அந்த இருண்ட நாட்களில் இவரது “மூலதனம்” எனும் புத்தகம் முதலாளி, தொழிலாளிகள் என அனைவரிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் பல உண்மைகள் உடைக்கப்பட்டிருந்தது.

மத நம்பிக்கை கொண்டவர்கள் இவரது பெற்றோர்களாக இருந்தாலும் இவர் கம்யூனிசம் என்பதையே கையில் எடுத்தார். உலகம் முழுவதும் அறிந்த சிறந்த எழுத்தாளாரான இவர் எழுதிய புத்தகங்கள் எத்தகைய பலம் கொண்டது என்பதற்கு ஒரே உதாரணம், இவர் நாடு கடந்தப்பட்டார். அந்த அளவிற்கு இவர் மீது நடவடிக்கை எடுக்க காரணம் இவரது எழுதும், சிந்தனை திறனும் தான் காரணம்.

இவர் தனது சிறு வயது தோழியை காதல் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் இவரது குடும்ப வாழ்க்கையில் மிகவும் கொடுமையான வறுமையை சந்தித்திருக்கிறார். 4 குழந்தைகள் பிறந்த இவருக்கு வறுமையின் காரணமாக பசியால் நோயுற்று குழந்தைகள் இறக்க ஆரம்பித்தன. அப்பொழுது ‘குழந்தைகள் பிறக்கும் பொழுது தொட்டில் வாங்க காசு இல்லை, அவர்கள் இறக்கும் பொழுது சவ பெட்டியும் வாங்க காசு இல்லை’ என்று அவரது மனைவி கூறிய வார்த்தைகள் இவரது வாழ்க்கையை படமாக காட்டுகிறது.

இருந்தாலும் இவரது கம்யூனிச சிந்தனை மறையவில்லை. அதேபோல் அவரது எழுத்தின் வீரியமும் தளரவில்லை. உலகத்தில் பைபிளுக்கு அடுத்த படியாக அதிக மக்களால் படிக்கப்பட்ட புத்தகம் இவருடையது, இதுதான் இவரின் எழுத்தை விவரிக்ககூடிய ஒரே முறை.

இவர் தொழிலார்களின் பிரச்சனை குறித்து மட்டுமல்லாமல், முதலாளிகளின் பிரச்சனை குறித்தும் எழுதியுள்ளார். இன்றைய சுழலில் ஒருவர் பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டால் இவரது புத்தகத்தில் இருந்து இவர் எழுதிய வார்த்தைகளை தான் தேடுவார்கள், இதுதான் இவரது வாழ்நாள் வெற்றி. முதலாளிகள் மட்டுமல்லாமல், தொழிலாளிகளுக்கும் தீர்வு தரும் ஒரு புத்தகமாக இது உள்ளது.

பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் அருமை, இழந்தவனுக்கு தான் தெரியும் இழந்ததின் அருமை. அதே போல் பொருளாதாரத்தின் அடிப்படையில் சிக்கிய இவரது வாழ்க்கையும் இவர் கொண்ட ஞானமும்  இவரது எழுத்தின் தாக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். இவரது மறைவிற்கு பிறகு விதைத்தவனாய் உறங்காமல், விதைகளாய் உயர்ந்துகொண்டிருகிறார் இன்றும் கார்ல் மார்க்ஸ்.