அம்மா சேவா அறக்கட்டளையின் சார்பில் இலவச அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

ஊரடங்கு காலத்தில் வாழ்வாதார சிக்கலும், கொரோனா வைரஸ் அபாயமும் அதிகம் கொண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அம்மா சேவா அறக்கட்டளையின் சார்பில் சமூக இடைவெளியுடன் அத்தியாவசிய மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் முக்கவசம் ஆகியவை மூன்றாம் கட்டமாக வழங்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்பணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில் அதிமுக கவுண்டம்பாளயம் 6 வது வார்டு செயலாளர் முருகேஷ் கொண்டார். இந்த அத்தியாவசிய மளிகை பொருட்களை அம்மா சேவா அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர் சோனாலி பிரதீப் மற்றும் நிர்வாக அறங்காவலர் பிரதீப் ஜோஸ் ஆகியோர் வழங்கினார்கள்.