நாளை மட்டும் பகல் முழுவதும் அத்தியாவசிய கடைகள் இயங்கும்

முழு ஊரடங்கு உத்தரவு பெற்றிருக்கும் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், இன்று (29.4.2020) புதன்கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், நாளை முதல் முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும் எனவும் அதிலும் நாளை ஒரு நாள் மட்டும் (30.4.2020) அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.