இன்றும் இட்லி 1 ரூபாய் தான்

கமலா பாட்டி கடந்த ஆண்டில் பலராலும் பேசப்பட்ட ஒருவர். இவரை பற்றி நாம் அனைவரும் அறிவோம். 1 ரூபாய்க்கு இட்லி விற்கும் இந்த பாட்டி பல ஆண்டுகளாக இந்த விலையை உயர்த்தவில்லை. 25 பைசாவுக்கு 1 இட்லி என ஆரம்பித்த இந்த பாட்டி தற்போது 1 ரூபாய்க்கு விற்றுவருகிறார்.

மற்ற நாட்கள் சரி தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் விலை எதுவும் உயர்த்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. தற்போதும் அதே 1 ரூபாய்க்கு தான் விற்பனை செய்கிறார். இந்த நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல முடியாத வடநாட்டு தொழிலாளர்களுக்கு இதனை வழங்குவதாகவும், இதற்கான ஒரு சில பொருட்களை சிலர் வழங்குகிறார்கள், அதனால் என்னால் 1 ரூபாய்க்கு விற்க முடிகிறது என்று ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.