பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் உதவி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்ட செளரிபாளையம், உடையாம்பாளையம் பகுதி மக்களுக்கு அரிசி மற்றும் மாஸ்க்குகள் வழங்கப்பட்டது. மாஸ்க்குகள் சமூகசேவகர் வடிவேல் வழங்கினார்கள். இந்நிகழ்வில் நிர்வாகிகள் கெளரி சங்கர், கார்த்திக், ரஞ்சித், பிரகாஸ், பிரவின், கண்ணன், கமலகண்ணன், இளங்கோ, சுரேஸ், ஹரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.