தங்கத்தை விட தண்ணீர் விலை அதிகமாகும் காலம் வரும்.

தங்கத்தை விட தண்ணீர் விலை அதிகமாகும் காலம் வரும்.

சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன்

கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், கணினி பொறியியல் துறை  மற்றும்¸ கல்லூரியின் இயற்கை மன்றம்  இணைந்து நடத்திய “இயற்கை” பற்றிய சொற்பொழிவு,  கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ‘சிறுதுளி’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர்,பிரிக்கால் நிறுவனத் தின் துணை தலைவர் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் வனிதா மோகன் பங்கேற்றார். கல்லூரியின் முதல்வர் என்.ஆர்.அலமேலு தொடக்க உரையாற்றினார். கல்லூரியின் இயக்குனர் ஏ.எபினேசர் ஜெயக்குமார் தலைமை உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் கூறியதாவது:” நாம்  ஒவ்வொருவரும் நமது ஆக்ஸிஜன் தேவைக்காக குறைந்தது ஒரு மரமாவது நடவேண்டும்.  தங்கத்தை விட விலை அதிகமானதாக தண்ணீர் மாறக்கூடிய காலகட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இயற்கையைக் காக்க நாம் ஒரு அடி எடுத்து வைத்தால், இயற்கையானது  நம் வருங்காலத்தை காக்க 10 அடி  எடுத்து வைக்கும். மேலும், மழை நீரை சேகரிக்க வேண்டியதின் அவசியத்தையும், பள்ளி,கல்லூரி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மழைநீரை சேகரிக்க சிறுதுளி அமைப்பு எடுத்துவரும் முயற்சிகளை பற்றியும் கூறினார்.

விழாவில் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.  கணிப்பொறித் துறைத்தலைவர் கிரேஸ் செல்வராணி நன்றியுரை வழங்கினார்.