கோயம்புத்தூர் புரொடெக்டிவிட்டி கவுன்சில் -ன் வைர விழா துவக்கம்…

கோவை, கோயம்புத்தூர் புரொடெக்டிவிட்டி கவுன்சில் – ன் வைர விழா அண்மையில்  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், வைரவிழா துவக்கம், டிப்ளமோ இன் குவாலிட்டி மேனேஜ்மெண்ட் படிப்பு அறிமுக விழா மற்றும் பிஜிடிபிஎம் -ன் 37 வது பட்டமளிப்பு விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. சிபிசியின் தலைவர் டாக்டர் ஏ.எம்.நடராசன் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிபிசியின் முன்னாள் தலைவர் ஆர்.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வைரவிழாவின் லோகோவை அறிமுகப்படுத்தினார். மேலும், சிபிசியில் தலைவராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் இவ்விழாவில், சிபிசியின் துணைத் தலைவர் கே.முத்துகுமார்,  டிப்ளமோ இன் குவாலிட்டி மேனேஜ்மெண்ட் துறை தலைவர் ஏ.ஸ்ரீநிவாசன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி & சிண்டிகேட் உறுப்பினர் டீன் டாக்டர் ஆர்.சரவணசெல்வன், சிபிசி நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் என்.விவேக் மற்றும் கொடிசியா தலைவர் வி.சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். சிபிசி கௌரவ செயலாளர் டாக்டர் எஸ்.சுதாகர் நன்றி தெரிவித்தார்.