இணைய தளத்தின் மூலம் வீட்டிலிருந்தே பாடங்கள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளில் கூட இணைய தளங்கள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளிகளுக்கு இதுவரை இது போன்ற என்ற மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதனால் https://t.co/Mej2pSY4Hh என்ற இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.