தி.மு.க 53 வது வட்ட கழகம் சார்பாக ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்

கோவையில் தி.மு.க 53 வது வட்ட கழகம் சார்பாக சித்தாபுதூர் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு வருமானம் இல்லாமல் தவிக்கும் ஏழை குடும்பங்களுக்கு கழக தொண்டர்கள் உதவ வேண்டி தளபதி ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தது இருந்தார். இந்நிலையில் அவரின் உத்தரவு படி கோவை 53 வது வார்டு வட்ட கழகம் சார்பாக சித்தாபுதூர் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு அரிசி பருப்பு மளிகை பொருட்களை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வழங்கினார். வட்ட கழக செயலாளர் மு.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இதில் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டு கொரோனா பரவலை தடுக்க சமூக விலகலின் தேவை குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. இதில் பகுதி கழக செயலாளர் நாகராஜ், உட்பட தி.மு.க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.