ஸ்ரீ செளடேஸ்வரி அறக்கட்டளைகள் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்

கோவை ஸ்ரீ செளடேஸ்வரி வித்யாலயா மற்றும் ஸ்ரீ செளடேஸ்வரி அறக்கட்டளைகள் சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் ரூபாய்க்கான வரைவோலை(DD) உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கப்பட்டது.

இதனை அறக்கட்டளை செயலாளர் ஆராதனா ராஜீ மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் N.V.சுப்பிரமணியம், ஸ்ரீனிவாசன், D.செல்வராஜ், C.K. திருமேனி ஆகியோர் உடன் இருந்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி முன்னிலையில் அமைச்சரிடம் வழங்கப்பட்டது.