கொரோனா நிவாரண பொருட்கள் வினியோகம் துவக்கம்

கோவை சுகுணாபுரம் கிருஷ்ணா நகரில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்க திட்டமிட்டிருந்த கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கி துவக்கி வைத்தார். இவருடன் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.