இந்தியாவில் 8 ஆக உயர்வு

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இதுவரை இந்த வைரஸால் இந்தியாவில் 415 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏழு பேர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சைபெற்று வந்த 55 வயதான நபர். மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது உடற்கூராய்விற்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.