வி.எல்.பி ஜானகியம்மாள் கலை கல்லூரி ஆண்டு விழா

கோவைப்புதூர் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் 28 –
ஆவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம் வரவேற்புரை வழங்கினார்.
வி.எல்.பி.ஜே அறக்கட்டளையின் தலைவர் சூர்யகுமார் தலைமையுரை வழங்கினார்.
துணை முதல்வரும், மின்னணுவியல்துறை துறைத்தலைவருமான வாசுதேவன் 2019-2020
ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கையை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு பிரபல திரைப்பட நடிகை, பின்னணி பாடகர் மற்றும் நடனக்
கலைஞருமான ரம்யாநம்பிசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கணிப்பொறித்
துறைத் தலைவர் முருகேசன் சிறப்பு விருந்தினர் அறிமுகம் வழங்கினார். ஃப்யூச்சர் கேர்
குரூப்ஸ் ஆலோசகர் மனோஜ் சிறப்பு விருந்தினருக்கு மலர்க்கொத்து வழங்கி உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், தனது கல்லூரி நாட்களில் நடந்த நிகழ்வுகள்
சிலவற்றை மேற்கோள் காட்டினார். மேலும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை
இடையில் நிறுத்தக் கூடாது என்றும் அதற்காக வரும் இடையூறுகளைச் சமாளிக்க வேண்டும்
என்றும் ஊக்கப்படுத்தினார். வாய்ப்பு என்பது ஒருமுறை மட்டுமே வரும் என்றும் அந்தக்
காலத்தைத் தவறவிடாது பயன்படுத்த வேண்டும் என்றார்.மேலும் பல்வேறு கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.