கோவை பெண் இந்திய வனப்பணி தேர்வில் வெற்றி

மத்திய பொது பணி தேர்வாணையம் நடத்திய இந்திய வனப்பணி தேர்வில் கனகராஜ் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் பயின்ற கோவை மாணவி பரணி வெற்றி பெற்றுள்ளார். தற்போது வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் அவர் 58-ஆம் இடத்தில் வெற்றிப் பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு தேர்வின் இறுதியான நேர்காணலிற்க்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அடுத்த தினமே நேர்காணலுக்கு தயாராகி, 10 நாட்களில் புது டெல்லி சென்று நேர்காணலில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பரணி கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.