பி.எஸ்.ஜி ஐடெக் கல்லூரியின் முதலாம் ஆண்டு முன்னாள் மாணவர் மாநாடு

பி.எஸ்.ஜி ஐடெக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு முன்னாள் மாணவர் மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஓசூர் இலக்கியம் ஆட்டோ ஏன்சிலரிஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் ஆதி கலந்து கொண்டார்.

கல்லூரி முதல்வர் மோகன்ராம், துணை முதல்வர் சந்திரமோகன் ஆகியோர் முதன்மை வகித்தனர்.

பி.எஸ்.ஜி ஐடெக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சங்கத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன், துணை தலைவர் ஹாரிஹரன், செயலாள‌ர் விஜய் ஜெயராம், துணை செயலாளர்கள் கார்த்திக், பாரத் அருண், ஸ்ரீநிதி தங்கம், ஷம்யுக்தா பிரியதர்ஷினி, ஷிவாங்கிநாடியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர்.

முன்னாள் மாணவர்கள் சார்பில் சுமார் 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் இன்று கல்லூரி மாணவர்களில் கல்வி தொகை தேவைப்படும் 10 பேருக்கு ஸ்காலர்ஷிப் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.