சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற பார்க் கல்லூரி மாணவன்

சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில்  பார்க் தொழில்நுட்பக்  கல்லூரி,  சுற்றுச்சூழல் பொறியியல் துறை இறுதியாண்டு மாணவர் சமரத் கே அரோரா பதக்கம் வென்றுள்ளார்.

“உலக சிலம்பம் அசோசியேஷன்” மற்றும் “மலேசியா சிலம்பம் அசோசியேஷன்” இணைந்து நடத்திய உலக சாம்பியன்ஷிப் போட்டி கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில்  நடைபெற்றது. இதில் பல உலக நாடுகளை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்குபெற்றார்கள். இதில் சுருள்வாள், வாள் & கவசம் மற்றும் சிலம்பம் போட்டிகளில் கலந்துகொண்டு நமது மாணவர் சமரத் கே அரோரா முறையே வெள்ளி மற்றும்  வெண்கலம்  வென்றுள்ளார். நாடு திரும்பிய வீரர் நமது கல்விக்குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா அவர்களிடம் வாழ்த்து பெற்றார்.