மாநகராட்சி அலுவலகத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்.

காந்தியின் 150 ஆம் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காந்தியின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து அலுவலர்கள் மரியாதை செய்தனர்.

நாடுமுழுவது காந்தியின் 150வது பிறந்தநாளை மிகவும் விமர்சயாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் இந்தியாவின் விடுதலைக்காக அகிம்சை வழியில் வெள்ளையர்களை விரட்டியவர். அத்தனை வசதிகளும் இருந்தும் அறை உடையில் எளிமையாக வாழ்ந்தவர். இவரின் பெருமையை சொல்ல அவசியமில்லை. அப்படி இந்த மகானை போற்றி மரியாதை செலுத்தும் விதமாக கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காந்தியின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி மற்றும் மாநகர பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.