கே.ஐ.டி கல்லூரியில் “ஜல்சக்தி அபியான்” திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பள்ளபாளையம் பேரூராட்சி மற்றும் கண்ணம்மாபாளையம் பேரூராட்சி இணைந்து “ஜல்சக்தி அபியான்” திட்டத்தின் மூலம் நீர்நிலை பாதுகாத்தல் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழிச்சி கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் இணைத்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் மாணவ மாணவியருக்கு மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவன தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி அவர்கள் தலைமை தங்கினார். கல்லூரி துணை தலைவர் இந்து முருகேசன், செயல் அறங்காவலர் சூர்யா, முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.