சிந்தனைக் கவிஞர் கவிதாசனுக்கு ‘சாதனைச் சுடர்’ விருது

நமது நம்பிக்கை மாத  இதழின்  13ம் ஆண்டு வெற்றி வாசல் விழாவில், லட்சக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தொடர்ந்து தன்னம்பிக்கை வளர்க்கும் சீரிய பணிக்கான சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்களுக்கு ‘சாதனைச் சுடர்’ விருது, கே.பி.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.பி.ராமசாமி அவர்களால் வழங்கப்பட்டது. இடமிருந்து வலம்- நமது நம்பிக்கை இதழின் இதழாசிரியர் மரபின் மைந்தன் முத்தையா, தொழிலதிபர் வி.கே.டி.பாலன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி க.சுந்தரராமன் மற்றும் நகைச்சுவை அரசர் எஸ்.மோகனசுந்தரம் ஆகியோர் உள்ளனர்.