சச்சிதானந்த பள்ளியில் குடியரசு தின  விழா பட்டிமன்றம்

குடியரசு தின விழாவையொட்டி, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சிறப்புச் சிந்தனைப் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்விற்குப் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை வகித்தார்.

‘‘மாண்புமிகு மாணவர்களை உருவாக்குவதில் பெரிதும் துணை நிற்பது – நல்லறிவே! நற்பண்புகளே!” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கணினித்துறை உதவிப்பேராசிரியர் டாக்டர் விஜயபாஸ்கர் நடுவராக இருந்து சிறப்புச் செய்தார்.

இரு தரப்பினரின் வாதங்களுக்குப் பின்னர், நடுவர் விஜயபாஸ்கர், ‘மாண்புமிகு மாணவர்களை உருவாக்குவதில் பெரிதும் துணை நிற்பது  நற்பண்புகளே!’ என்று தீர்ப்பளித்தார். அத்துடன், நல்லறிவும், நற்பண்புகளும் நாணயத்தின் இருபக்கங்களைப் போல என்பதனைக் கருத்தில் கொண்டு இளம் வயதிலேயே மாணவர்கள் சிறந்த அறிவுடனும் நற்பண்புகளுடனும் திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் சக்திவேல், கல்வி ஆலோசகர் கணேசன், ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.