ஆர்.வி. கல்லூரியில் பொங்கல் விழா

காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் வைத்து படையலிட்டு கடவுள் வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து, கபடிப்போட்டி உறியடித்தல், கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வள்ளிக்கும்மியாட்டம் மற்றும் நாட்டுப்புற நடனக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள், நிர்வாக மேலாளர் சீனிவாசன், அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.