தமிழ்நாடு வேளாண் பல்கலை கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான மையம், புதுக்கோட்டை வம்பன் தேசிய பயறு ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வகங்களுடன் கூடிய நிர்வாக கட்டிடம் மற்றும் மாணவர்கள் படிப்பு மையம், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மாணவியர் படிப்பு மையம், விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை ஆகிய கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.