அன்னூரில் செல்வம் ஏஜென்சிஸ் புதிய கிளை தொடக்கம்

பம்ப் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ள செல்வம் ஏஜென்சிஸ் – டாரோ பம்ப்ஸ் (Taro Pumps) புதிய கிளையை அன்னூர் அவிநாசி சாலையில் திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. இந்த புதிய கிளையை ஓய்வு பெற்ற துணைக் காவல் கண்காணிப்பளார் பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து செல்வம் ஏஜென்சிஸ் உரிமையாளர் நந்தகுமார் கூறுகையில்: கோவையில் 60 ஆண்டுகாலமாக விவசாய மக்களுக்கு பம்ப் விற்பனையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம். மேலும் கோவை தொழில் நகரமாக பெருகி வருகிறது. அன்னூர் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு மோட்டார் பம்ப் சேவையை வழங்க வேண்டுமென கருதி எங்கள் புதிய கிளையை ஆரம்பித்துள்ளோம். இப்பகுதியில் விவசாயிகள் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள், வீட்டு குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனவே இங்கு பம்ப் தேவையும் அதிகமுள்ளது. மேலும், இந்தக் கிளை ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் செயல்படும் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற துணைக் காவல் கண்காணிப்பளார் லிங்குசாமி, செல்வம் ஏஜென்சிஸ் ஜெனரல் மேனேஜர் சுவாமியப்பன், டெக்ஸ்மோ சேல்ஸ் மேனேஜர் ராஜசேகர்,  டெக்ஸ்மோ ஏரியா சேல்ஸ் மேனேஜர் கண்ணன், டெக்ஸ்மோ விற்பனை அதிகாரி அரவிந்தன், செல்வம் ஏஜென்சிஸ் பிசினெஸ் டெவலப்மென்ட் இயக்குனர் அனிஷ், விவேகம் பள்ளி தாளாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.