சங்கரா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் 29 வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கே.பி.ஆர். இந்தியா நிர்வாக இயக்குனர் கீதா ராமமூா்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர்கள் கல்யாணராமன், பட்டாபிராமன், நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலர் ராமச்சந்திரன், இணைச் செயலர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச்செயலர் நித்யா ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 310 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் எட்வர்ட் பெர்னார்ட் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.