கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்விப் பிரிவின் முதலாம் ஆண்டு தொடக்க விழா

கே.பி.ஆர் பெண் பணியாளர் கல்விப் பிரிவின் முதலாம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கே.பி.ஆர் மில் நிறுவனத்தின் ஒரு அங்கமான குவாண்டம் நிட்ஸ்-ன் மூன்றாவது யூனிட்டில் தெக்கலூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கே.பி.ஆர் குழும தலைவர் கே.பி.ராமசாமி தலைமை தாங்கினார். மத்திய புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயன், ஸ்ரீ ராம லிங்கா ஸ்பின்னர்ஸின் உரிமையாளர், பிரம்ம குமாரி சகோதரி கோதை, மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் இந்த தொடக்க விழாவில், கே.பி.ஆர் மில் நிறுவனங்களின் செயல் இயக்குநர்கள் ஆனந்த கிருஷ்ணன், சக்திவேல், கே.பி.ஆர் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு கல்வி கறக்கும் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.