வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதே அரசின் நோக்கம் அமைச்சர் சி.வி. கணேசன்

தமிழக அரசு சார்பில் கோவை கவுண்டம்பாளையதில் உள்ள கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சிவி.கணேசன், வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் இந்த முகாமில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு பணி ஆணையினை வழங்கினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சி.வி. கணேசன், தமிழக முதலமைச்சர் ஆணைப்படி 1லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2வது வேலை வாய்ப்பு முகாம் இன்று கோவையில் நடைபெற்றுள்ளது. 8 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரம் இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். டிசம்பர் மாத இறுதிக்குள் 100 வேலைவாய்ப்பு முகாம் நடத்தி முடிக்கப்படும்.

7அரை லட்சம் பேர் இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுள்ளனர். வேலை இல்லை என்பதை போக்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதே எங்களது நோக்கம். மாற்று திறனாளிகக்கு இனி வரும் முகாமில் அதிகம் கவனம் செலுத்துவோம் என தெரிவித்தார்.