கோவை பூங்காவில்  மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை  தெற்கு மண்டலம்  ராஜகோபால் வீதியில்  உள்ள பூங்காவில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்,  புதன்கிழமை நேரில் சென்று   பார்வையிட்டார்.

ஆய்வு மேற்கொண்ட அவர்  பூங்காவிலுள்ள செடி, கொடிகளை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதில் துணை மேயர் வெற்றிசெல்வன்,தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பாபு, உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்து பார்வையிட்டனர்