எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் டவுன் ஹால் மீட்டிங்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) வங்கியின் சார்பில் “டவுன் ஹால் மீட்டிங்” – சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை கோவை, கவுண்டம்பாளையத்தில் உள்ள கல்பனா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பன்னிரெண்டாம் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவருக்கு ராமசாமி சின்னம்மாள் அறக்கட்டளையின் நிறுவனர் சரஸ்வதி பரிசு வழங்கினார். அருகில் எஸ்.பி.ஐ. வங்கியின் உதவி பொது மேலாளர் ஸ்ரீதர், பிராந்திய மேலாளர்கள் இன்பரசு (கோவை வடக்கு), ஸ்ரீஜா (கோவை தெற்கு) மற்றும் கோவை மகளிர் திட்டம் அமைப்பின் உதவி திட்ட அதிகாரி சுதா ஆகியோர் உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் இளம் தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் மாணவர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்பட்டது.