மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

கோவை கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வகுப்பறைகள் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள.

மாணவர்கள் பயன்பாட்டிற்காக இக்கட்டடத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வியாழக்கிழமை  திறந்து வைத்தார்.

மேலும் இவ்விழாவில் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொதுசுகாதாரக்குழுத்தலைவர் மாரிச்செல்வன், கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர்கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் விமல்ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.