கோவையில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சரணகோஷ யாத்திரை

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதை கண்டித்து கோவையில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சரணகோஷ யாத்திரை நடைபெற உள்ளது. சபரிமலைக்கு பத்து வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்பளித்து உள்ள சூழ்நிலையில் நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன ஆச்சார நடைமுறைகளை அதேபடி தொடர்ந்து பின்பற்ற வலியுறுத்தி கோவையில் சரண கோஷ யாத்திரை கோவை ஸ்ரீ ஐய்யப்பசேவா சங்கத்தின் சார்பில் வருகிற 13ஆம் தேதி நடைபெற உள்ளது. சித்தாபுதூர் ஐயப்பசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வி கே கே மேனன் ரோட்டில் பஜனையுடன் நிறைவடைகிறது. இதில் அனைத்து பக்தர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஐயப்ப சேவா சாங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளபட்டு உள்ளது.