அரசு பள்ளி மாணவிகளுக்கான இலவச ரத்த சோகை பரிசோதனை முகாம்

மக்கள் சேவை மையம், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, வேர்ல்ட் மலையாளி கௌன்சில் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இனைந்து துளிர் திட்டத்தின் கீழ் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கான இலவச ரத்த சோகை மற்றும் சக்கரை அளவு பரிசோதனை முகாம் கோவை ராம்நகர் ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு சட்டமனற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் கிருஷ்ணன் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.ஆர். குழுமத்தின் முதன்மை இயக்கு அலுவலர் சுவாதி ரோஹித், ராசி சிட்ஸின் நிறுவனர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.