இந்துஸ்தான் கல்லூரியில் செல்லப்பிரணிகளுக்கான சர்வதேச பூனைகள் கண்காட்சி

கோவையில் முதல்முறையாக இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெட் கார்னிவல் மற்றும் பூனை கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் பூனைகளுக்கும் நாய்களுக்கும் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி அதற்க்கான சான்றிதழ்களும் வழங்கபடவுள்ளன. இது குறித்து பேசிய இன்டி பெட் அனிமல் வெல்பேர் தலைவர் உமா மகேஸ்வரன், “இந்த கண்காட்சியானது இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் 200 க்கும் மேற்பட்ட நாய்களும், 150 க்கும் மேற்பட்ட பூனைகளும் கலந்து கொண்டுள்ளன. மேலும் அனைத்து விதமான செல்ல பிரானிகளும் ஒட்டகம், மாடுகள், பாம்புகள், குதிரைகள் இடம்பெற்றுள்ளன . இந்தியாவில் விலை உயர்ந்த நாய்கள் கூட கண்காட்சியில் இடம்பிடித்துள்ளது என்றும் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் ” கூறினார் .