தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின்படி, செவ்வாய்க்கிழமை அன்று மத்திய மண்டலம், வார்டு எண்.81-க்குட்பட்ட ரங்கே கவுண்டர் வீதி, தாமஸ் வீதி பகுதிகளில் செயல்பட்டுவரும் 23 கடைகளில் சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 130 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.