பிறந்தநாளன்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய நேருநகர் நந்து!

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் இணைந்து, நேரு நகர் நந்து (எ) பத்மநாபனின் 60வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஜென்னில் ரெசிடென்சியில் செவ்வாய்க்கிழமை நடத்தியது. இந்நிகழ்விற்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ஐயா, பொதுச்செயலாளர் கோவிந்தசாமி மற்றும் ஃபைராவின் (FAIRA) நிறுவனரும், தேசிய தலைவருமான ஹென்றி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஒரு பகுதியாக பார்வையற்ற ஏழை எளியோர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு நேருநகர் நந்துவை வாழ்த்தினர்.