ஆர்.எஸ். புரம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை.. வாலிபர் கைது

கோவை ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை அருகே வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ். புரம் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

சந்தேகத்தின்பேரில், அங்கிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் சோதனை செய்த போது அவர் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்த கோவை வேடம்பட்டி நம்பிஅழகன் பாளையத்தை சேர்ந்த பெயிண்டர் விஷ்ணு(26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் 10 சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட விஷ்ணுவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.