சச்சிதானந்த பள்ளியில் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா

கோவை, மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், 2023-2024-ஆம் கல்வி ஆண்டிற்கான மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் திருக்குறள் மன்றம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பட்டிமன்றப் பேச்சாளரும், கவிஞருமான உமாமகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா..வா..வா..’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் தலைமை உரையாற்றினார். விழாவிற்குப் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி மற்றும் துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், வாழ்த்துக் கவிதை வாசித்தார்.

தொடர்ந்து மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் பாரதிதாசன், பாரதியாரின் பாடல்களை பாடியும் திருக்குறளின் பெருமைகளை குறித்தும் மாணவர்கள் பேசினர். இந்நிகழ்வுகளை தமிழ்த்துறை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.