24 மணி நேர குடிநீர் விநியோகப் பணிகள் ஆய்வு

கோவை சங்கனூர் நாராயணசாமி நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பகிர்மானக் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை குடித்துப்பார்த்து ஆய்வு செய்தார். இந்நிகழவில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் ஷர்மிளா, சிவகுமார், மாநகரப்பொறியாளர் இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர்கள் புவனேஸ்வரி, இராமசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்.