கோவை, ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் பட்டய நாள் விழா மற்றும் தொழிலில் சிறந்து விளங்குவோருக்கான விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடத்தியது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகனுக்கு விருதினை வழங்கினார். ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் அபர்ணா சுங்கு கிரீடம் அணிவித்து கவுரவித்தார். இந்நிகழ்வில் ரோட்டரி மாவட்டம் 3201 கவர்னர் ராஜ்மோகன் நாயர், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் செயலாளர் சிரக் வோரா மற்றும் பலர் கலந்துகொணடனர்.