ஸ்ரீ ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பார்மசி கல்லூரியில் உலக மகளிர் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் ரவி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் கல்லூரியின் பிரெஞ்சு துறை தலைவர் மற்றும் பேராசிரியர் ஜீவா ரத்தினம் குருசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு “டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமுயற்சிகளும் தொழில்நுட்பமும்” என்ற தலைப்பில் பேசினார்.

அதன்பின், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார் வாழ்த்துரை வழங்கினார்.