எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரி சார்பில் பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரி மாணவர்கள், குறும்பபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெண்கள் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இவ்விழா எஸ்.என்.எஸ் குழுமத்தின் தலைவர் சுப்ரமணியன், தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார், தாளாளர் ராஜலஷ்மி வழிகாட்டுதலில் நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் கவிதா, துணைமுதல்வர் பாரதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.