எஸ்.என்.எம்.வி கல்லூரியில் சமச்சீர் பொங்கல் விழா

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமச்சீர் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகளான கும்மி, ரேக்ளா, கபடி, கயிறு இழுத்தல், உறியடித்தல், பறையிசை, சிலம்பாட்டம் போன்ற போட்டிகளும், பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக துறைவாரியாக கிணறு, தெப்பக்குளம், அரவைக்கல், உரல், அம்மிக்கல், மாட்டு வண்டிகள், நாட்டு மாடுகள், குதிரை, சண்டை சேவல் போன்ற பழங்காலப் பொருட்களை காட்சிப்படுத்தி சிறப்பாக கொண்டாடினர்.

இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் மகாவீர் போத்ரா, செயலாளர் சுனில்குமார் நஹாடா, எஸ்.என்.வி பள்ளியின் துணைச்செயலாளர் ரத்தன்சந்த் போத்ரா, பொருளாளர் அசோக் லூனியா, முதல்வர் சுப்பிரமணி, மேலாண்மைத்துறை இயக்குநர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.